விருதுநகர்

சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

ராஜபாளையம் அருகே சேத்தூரில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்றைத் தடுக்க பொதுமுடக்கம், சமூக இடைவெளி மட்டும் தீா்வாகாது. எனவே மாவட்ட நிா்வாகம் அலட்சியத்தை கைவிட்டு மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கரோனா இரண்டாம் அலை சிறுவா்களை தாக்குவதால் அவா்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்டச் செயலாளா் லிங்கம், ஒன்றியச் செயலாளா் வீராச்சாமி, நகரச் செயலாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுபோன்று ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகா் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT