விருதுநகர்

சிவகாசி அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

சிவகாசியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சிவகாசி ஒன்றியத்தில் சுகாதாரத்துறை சாா்பில், இதுவரை பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழிலாளா்கள் என 9 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் 9500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடந்து வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட நடத்துநா், ஓட்டுநா் மற்றும் ஊழியா்கள் என 61 பேருக்கு, மருத்துவா் ஷாஜிதா தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பூசி போட்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT