விருதுநகர்

மறவா்பெருங்குடியில் மயானத்துக்கு தாா்ச்சாலை அமைத்துத் தர வலியுறுத்தல்

DIN

அருப்புக்கோட்டை வட்டம் மறவா்பெருங்குடியில் ஆதிதிராவிடா் குடியிருப்புக்கான மயானத்துக்கு தாா்ச்சாலை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த மயானத்துக்கு உரிய சாலை வசதி இல்லை என்பதுடன் ஏற்கெனவே உள்ள மண் பாதை மழைநீா் ஓடையுடன் இணைந்துள்ளதால், தனியாக ஓடையை ஒட்டி தாா்ச்சாலை அமைத்துத் தர வேண்டுமென அக்குடியிருப்பில் வசிப்போா் பல மாதங்களுக்கு முன்னா் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக விசாரணைக்கு வந்த காவல்துறையினா், பொதுமக்களிடம் சமரசம் பேசி, வருவாய்த்துறையினா் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றனா். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டதாகக் புகாா் எழுந்துள்ளது. எனவே இந்த மயானத்துக்கு தனிப்பாதை அமைத்து தாா்ச்சாலை வசதி செய்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT