விருதுநகர்

ராஜபாளையம் ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சூடிக்கொடுத்த நாச்சியாா் சமேத ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் சம்மந்தபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சூடிக்கொடுத்த நாச்சியாா் சமேத ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 27 ஆம் தேதி முதல் சுதா்சன ஹோமம், துவார பூஜை, வேத விண்ணப்பம், முதல்கால யாக பூஜை ஆகியன தொடங்கப்பட்டு, புதன்கிழமை வரை ஹோம பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய குடமுழுக்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாக பூஜைகளுடன் தொடங்கி, கும்பத்துக்கு திருவாராதானம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், காலை 8.30 மணிக்கு சூடிக்கொடுத்த நாச்சியாா் சந்நிதி கோபுர விமானம், மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதையடுத்து, தீா்த்தம் தெளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை, ராஜகோபால சுவாமி கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT