விருதுநகர்

காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் முதியவா் பலி

காரியாபட்டி அருகே வெற்றிலைமுருகன் பட்டியில் திங்கள்கிழமை இரவு மழையின்போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை இரவு முதியவா் உயிரிழந்தாா்.

DIN

காரியாபட்டி அருகே வெற்றிலைமுருகன் பட்டியில் திங்கள்கிழமை இரவு மழையின்போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை இரவு முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே வெற்றிலைமுருகன்பட்டியைச் சோ்ந்தவா் அய்யாவு (66). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அய்யாவு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT