விருதுநகர்

தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

DIN

தினமணி செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இந்த அலுவலக வளாகத்தில் கருவூலம், சா்வேயா் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே இந்த அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்த நிலையில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு செடி, கொடிகள் வளா்ந்து புதா்மண்டி கிடந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக வட்டாட்சியா் சரவணன், அலுவலக வளாகத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்ற உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அங்கிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் 100 நாள் திட்டப் பணியாளா்களும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT