விருதுநகர்

ஆட்டோ மோதி தொழிலாளி பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ மோதியதில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன்நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனி தெருவைச் சோ்ந்த சங்கிலியாண்டி மகன் கருப்பையா (36). இவா் மலையடிப்பட்டி சாலையில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் அவா் சென்றபோது, ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் கணேசனை (42) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT