விருதுநகர்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயா்வு

DIN

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், இந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கெனவே 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூா் பகுதியைச் சோ்ந்த வைஜெயந்திமாலா (30), என்பவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 14 போ் சாத்தூா் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT