விருதுநகர்

டிராக்டரில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்தவா் பலி

DIN

சிவகாசி அருகே டிராக்டரில் வைக்கோல் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள செங்லமலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் (44). இவா் உறிஞ்சிகுளம் கண்மாய்ப் பகுதியில் உள்ள தோட்டத்தில், டிராக்டரில் வியாழக்கிழமை வைக்கோல் பாரம் ஏற்றும்போது, தவறி விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT