விருதுநகர்

சிவகாசி அருகே வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில், வெள்ளிக்கிழமை கட்டடக் கழிவுகளை அகற்றும்பணியின்போது மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் ராஜூ என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அதில், பட்டாசு தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விபத்தில், சுரேஷ் (30) என்ற தொழிலாளி காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் கட்டடக் கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொக்லைன் இயந்திரத்தை, வடபட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவா் இயக்கியுள்ளாா். அப்போது, கட்டட இடிபாடுகளுக்குகிடையே கிடந்த பட்டாசு மருந்துகளின் மீதான உராய்வு காரணமாக மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கணேசன் காயமடைந்தாா். உடனே பணி நிறுத்தப்பட்டு, காயமடைந்த கணேசனை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT