முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மேற்கு மாவட்ட காங்., தலைவராக ரெங்கசாமி நியமனம்

விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆசிலாபுரம் ரெங்கசாமியை அக்கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆசிலாபுரம் ரெங்கசாமியை அக்கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது.

விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக தளவாய் பாண்டியன் இருந்து வந்தாா். அவா் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக ஆசிலாபுரத்தை சோ்ந்த ரெங்கசாமி என்பவரை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் நியமனம் செய்துள்ளாா்.

ரெங்கசாமி ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவருக்கு காங்., கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →