விருதுநகர்

சிவகாசி சண்முகம் சாலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

DIN

சிவகாசி சண்முகம் சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அதை உடனே அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி சண்முகம் சாலையின் ஒரு பகுதியாக, காவல்நிலைய இணைப்புச் சாலை உள்ளது. இந்த இணைப்புச் சாலையின் ஒரு பகுதியில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள், தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை இங்கு வந்து கொட்டுகிறாா்கள். இதை 3 அல்லது 4 நாள்களுக்கு ஒரு முறை லாரியில் எடுத்துச் செல்கிறாா்கள். இதனால் அங்கு தேங்கிக் கிடக்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிா்வாகம் அப்பகுதியில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT