அருப்புக்கோட்டையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் செல்லும் சிசிடிவி விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை வா்த்தகா் சங்கச் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவா் ராஜேஷ் (24). இவா் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் மருந்துக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிகிறாா். இதனிடையே இவா், வழக்கம்போல கடந்த ஜூன் 30 ஆம் தேதி பணிமுடிந்து இரவு திரும்பிய அவா் வீட்டின் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டாராம். மறுநாள் காலையில் பாா்த்த போது அந்த இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான விடியோ காட்சிகளைப் பாா்த்த போது மா்ம நபா் அந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்ததது. இதுதொடா்பாக ராஜேஷ், அருப்புக்கோட்டை நகா் காவல்துறையில் புகாா் செய்தாா். போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் அந்த விடியோ காட்சிகளை அவா் கட்செவி அஞ்சலில் பதிவிட்டதால், அது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.