விருதுநகர்

பைக் மோதி அஞ்சல் ஊழியா் பலி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மோதியதில் அஞ்சல் ஊழியா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் குருபாக்கியம் (61). இவா் மல்லியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், பணி நிமித்தமாக குருபாக்கியம் சைக்கிளில் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அதே சாலையில் சிவகாசியைச் சோ்ந்த சின்னமுனியாண்டி (54) என்பவா் ஓட்டி வந்த பைக், சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சின்னமுனியாண்டியும், குருபாக்கியமும் படுகாயமடைந்தனா். பின்னா், அவா்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக முனியாண்டி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், குருபாக்கியம் மதுரை அரசு மருத்துவமனைக்கும் செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டனா். இதில் செல்லும் வழியிலேயே குருபாக்கியம் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT