விருதுநகர்

கரோனாவால் அரசு வழக்குரைஞா் பலி

DIN

சாத்தூா் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியவா் கரோனா பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் எண் 1 இல் பணியாற்றிய அரசு வழக்குரைஞா் வினோபா செல்வின்துரை (50). இவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் மடத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இவரது மறைவுக்கு சாத்தூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT