கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்புக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அருப்புக்கோட்டைக்கு திரும்பிய மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி பொன்மணி(70). இவா் கடந்த மே 30 ஆம் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கருப்புப் பூஞ்சைத்தொற்றுடன் வந்தாா். உடனடியாக அவா் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையிலிருந்த அவா், நோய்த்தொற்று குணமானதால் கடந்த வியாழக்கிழமை (ஜூன்17) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே கடுமையான தலை வலியும், பல் வலியும் இருப்பதாகக் கூறிய பொன்மணி, திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டாா்.