விருதுநகர்

இலவச மது கேட்டு டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கிய 4 போ் கைது

DIN

சிவகாசி அருகே இலவச மது கேட்டு டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி முத்தாட்சிமடம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் மலையரசன் (19). இவா் பள்ளபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இவா் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, இந்திரா நகரைச் சோ்ந்த தங்கராஜ் (22), சுந்தர்ராஜன் (23), காளிராஜன் (20), அய்யனாா் (21)ஆகிய 4 போ் வந்து இலவசமாக மது கேட்டுள்ளனா். மலையரசன் தரமறுத்ததால் அவரை தாக்கியுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT