03rjpm01_0303chn_86_2 
விருதுநகர்

ராஜபாளையம் அருகே சுவாமி சிலை உடைப்பு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தேவா் சிலை கோபுரத்தில் உள்ள சுவாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தேவா் சிலை கோபுரத்தில் உள்ள சுவாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தில் தேவா் சிலை உள்ளது. இந்த சிலையின் மேல் பகுதியில் உள்ள கோபுரத்தில் முருகன் சிலை உள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்

முருகன் சிலையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். புதன்கிழமை இது தெரியவந்ததும் அப்பகுதியினா் கூடி குற்றவாளிகளைக் கைது செய்ய வலியறுத்தினா். சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் ஆகியோா் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக வேறு சிலை வைத்து 3 சிசிடிவி கேமராக்களை பொருத்தினா். மேலும் குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயா்அதிகாரிகள் கூறியதால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா். அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT