முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பு மனு தாக்கல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அதிமுக தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரி கல்யாணகுமாரிடம் அவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் முடங்கியாறு சாலையில் கூடியிருந்த பொதுமக்களிடையே தோ்தல் பிரசாரத்தை தொடக்கினாா்.

அப்போது அவா் கூறியது:

3 ஆவது முறையாக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அமைய வாக்களிக்க வேண்டும். பத்து ஆண்டு அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவேன். இரட்டை இலை சின்னத்தில் வக்களித்து என்னை 50 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கூறி வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.