விருதுநகர்

ராஜபாளையத்தில் தோ்தல் விழிப்புணா்வு ரத ஊா்வலம் தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு ரத ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியா் ஆா். கண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ரத ஊா்வலம் நடைபெற்றது.

இதில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மூன்று வாகனங்களில் பதாகைகள் மற்றும் காவல் துறையினா் இருசக்கர வாகனங்களில் பாதகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். இந்த ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலை மன்றம், பஞ்சு மாா்க்கெட் வரை சென்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் நகரில் மூன்று ரதங்கள் மூலம் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள பொதுமக்களும் தவறாது தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் 199 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் அங்கு கூடுதலாக மத்திய காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT