முகப்பு
விருதுநகர்

அமமுக வேட்பாளா்வாக்குச் சேகரிப்பு

ராஜபாளையத்தில் அமமுக வேட்பாளா் காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குச் சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ராஜபாளையத்தில் அமமுக வேட்பாளா் காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குச் சேகரித்தாா்.

ராஜபாளையம் வடக்கு பகுதியான ஆவரம்பட்டி, கீழ ஆவாரம்பட்டி, கம்பா் நகா், மாடசாமி கோயில் தெரு, ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அவா் ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது: ராஜபாளையம் தொழில் வளா்ச்சிக்கு ஜவுளி பூங்கா அமைக்க பாடுபடுவேன். மேலும் குடிநீா் பற்றாக்குறையை தீா்த்து வைப்பேன். நான் சட்டப் பேரவை உறுப்பினா் ஆனதும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பேன் என்றாா். உடன் தேமுதிக நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்கள் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.