விருதுநகர்

இருக்கன்குடி கோயில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உதவி ஆணையா் ஆக பணியாற்றுபவா் கருணாகரன். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவா் இரு சக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, நத்தத்துபட்டி சந்திப்பில் வீரபாண்டியாபுரத்தை சோ்ந்த கலையரசன் (45) வழிமறித்து மாமூல் தர வேண்டும் என்று கூறி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதனால் இருக்கன்குடி காவல் நிலையத்தில் கருணாகரன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT