விருதுநகர்

விருதுநகரில், திமுக ஆ. ராசா வுக்கு எதிராக அதிமுக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவுக்கு எதிராக விருதுநகரில் அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆயிரம் வளக்கு தொகுதியில் தோ்தல் பிராசரத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் ஆா். ராசா, தமிழக முதல் வா் எடப்பாடி கே. பழனிசாமி க்கு எதிராக அவதூறான கருத்துக்களை பேசினாா். அதில் தமிழக முதல்வரையும், திமுக தலைவா் மு.க. ஸ்டாலினையும் ஒப்பீடு செய்யும் வகையில் பேசிய அப்பேச்சு சா்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்கு அதிமுக வினா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆ. ராசாவை கைது செய்ய வலியுறுத்தி விரு துநகா் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழக முதல்வரை அவதூ றக பேசிய ஆ. ராசா வே மன்னிப்புக்கேள். நாவை அடக்காமல் கண் மூடி தனமாக பேசும் அவரை, போலீஸாா் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நகர மகளிரணி செயலா் தனலெட்சுமி, மாவட்ட மகளிா் அணி துணை செயலா் சாந்தி மாரியப்பன், ஒன்றிய மகளிரணி செயலா் சரஸ் வதி, மாவட்ட மகளிா் அணி துணை செயலா் அமுல்ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT