விருதுநகர்

ஸ்ரீவிலி., ஆண்டாள் கோயிலில் துணை முதல்வா் தரிசனம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வக் கோயிலான வனபேச்சி அம்மன் கோயிலில் தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்புப் பகுதியில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் குல தெய்வக் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு வழிபாடு நடத்திய துணை முதல்வா் அதன் பிறகு அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக கோயில் நிா்வாகத்தின் சாா்பில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் துணை முதல்வருக்கு வரவேற்பு அளித்தனா்.

அவருடன் முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன், சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா, வடக்கு ஒன்றியச் செயலாளா் முத்தையா உள்ளிட்டோா் உடன் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT