விருதுநகர்

விஷம் குடித்து பெண் பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

DIN

சிவகாசி: சிவகாசியில் பெண் பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி போஸ் காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி மாலா (49). இவா் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு 3 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் காதல் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில் மற்ற 2 மகள்களும் காதலித்து வந்தனராம். இது தொடா்பாக மாலா தனது 2 மகள்களையும் கண்டித்தாராம். அதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, மனமுடைந்து காணப்பட்ட மாலா ஏப்ரல் 29 ஆம் தேதி விஷம் குடித்த தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT