விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து தனியாா் நூற்பாலை தொழிலாளி பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நூற்பாலை தொழிலாளி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் (50). இவா், ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்னதாக, கை, கால்களை சுத்தம் செய்வதற்காக அங்கிருந்த தண்ணீா் மோட்டாா் சுவிட்சை போட்டுள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சீத்தாராமன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சீத்தாராமன் சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT