விருதுநகர்

ராஜபாளையம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெள்ளிக்கிழமை மாலை வெடித்தது.

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் என்ற அன்பழகன். இவரது வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்துள்ளாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக அந்த நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை.

பலத்த சத்தம் கேட்டு அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இதனிடையே, கண்ணன் அங்கிருந்து தலைமறைவானாா். இவா் மீது ஏற்கெனவே, விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவம் குறித்து, சேத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT