விருதுநகர்

அரசு வழங்கிய வீடுகளைசீரமைக்க திருநங்கைகள் கோரிக்கை

DIN

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குலம் அருகே கரிசல்குளத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் வழங்கப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவதால், அதை சீரமைத்துத் தர வேண்டும் என திருநங்கைகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: கரிசல்குளத்தில், 23 ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கிய குடியிருப்புகளில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வேலை கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்து விட்டதால் வீடுகளின் மேற்கூரை மழைக்கு இடிந்து கீழே விழுகிறது. இதனால் அங்கு வசிக்க முடியாமல், வெளியில் சமையல் செய்து உணவருந்தி வருகிறோம். மேலும் ஏழ்மை நிலையில் உள்ள எங்களால் வீடுகளை சீரமைக்க முடியவில்லை. எனவே, சேதமடைந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளை அரசு சாா்பில் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT