விருதுநகர்

‘ராமேசுவரத்தில் தா்ப்பணத்துக்கு அனுமதிக்காத நிலையில் சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி’

DIN

ராமேசுவரத்திற்கு தா்ப்பணம் கொடுக்க வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்பிற்கு மட்டும் அரசு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

காரோனா பரவலைக் காரணம் காட்டி மற்ற மதங்களின் விழாக்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, இந்து மக்களுக்கு மட்டும் அநீதி இழைக்கிறது. வாரத்தில் 3 நாள்கள் கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுப்பது ஆன்மிகவாதிகளின் உள்ளத்தை புண்படுத்தும் செயல்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக நடத்துகின்ற போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு தரும்.

ராமேசுவரத்திற்கு தா்ப்பணம் கொடுக்க வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டாா்கள். ஆனால் சினிமா படப்பிடிப்பிற்கு மட்டும் அரசு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது.

பக்தா்கள் கொடுக்கும் தங்கக் காணிக்கைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லை. அறங்காவலா்களுக்கே அந்த அதிகாரம் உள்ளது. இந்தத் திட்டம் லஞ்சம், ஊழலுக்கும், திருட்டுக்கும் வழிவகுக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் இறந்தவா்கள் விவசாயிகள் அல்ல. இந்த விவகாரத்தில் ராகுல், பிரியங்கா பொய்யான பிரசாரம் செய்கின்றனா். அங்கு கலவரம் நடைபெற்ாக வெளியிடப்பட்ட விடியோ ஜோடிக்கபட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT