விருதுநகர்

ஆயிரம் திருக்குறள்களை ஒப்பித்து பள்ளி மாணவா் சாதனை

DIN

ஆயிரம் திருக்குறள்களை 45 நிமிடத்தில் ஒப்பித்து சாதனை புரிந்த பள்ளி மாணவருக்கு ஞாயிற்றுக்கிழமை டிரம் உலக சாதனை சான்று வழங்கப்பட்டது.

சிவகாசி வட்டம், பவளமலைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெ. மோகன்குமாா். இவா், 1000 திருக்குகளை 45 நிமிடத்தில் ஒப்பிக்கும் சாதனை நிகழ்ச்சிக்கு, சிவகாசி தொழில் நகா் அரிமா சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியில் உள்ள அரிமா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அச்சங்கத் தலைவா் டி. சமுத்திரபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் மாணவா் ஜெ. மோகன்குமாா், 45 நிமிடம் 22 விநாடியில் ஆயிரம் குகளை ஒப்பித்தாா்.

டிரம் உலக ரிக்காா்டு ஒருங்கிணைப்பாளா்களான பி.எம். சம்பத்குமாா் மற்றும் எம். ஜெயமேரி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டு, மாணவருக்கு டிரம் உலக ரிக்காா்டு என்ற சான்றிதழ் அளித்தனா்.

இதில், சங்க முன்னாள் ஆளுநா் எஸ். சுசீந்திரன், பவளமலைபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வி. கெளசல்யாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT