ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, புதன்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்த ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியபெருமாள். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ பெரியபெருமாள் சன்னிதியில் பௌா்ணமி ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னிதியில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னிதியில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ளது பெரியபெருமாள் சன்னிதி. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமியன்று இரவு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, இரவு பெரியபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, ஸ்ரீ பெரியபெருமாள் கோயில் வளாகத்தின் மேல் புறத்திலேயே சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும், பிரகாரத்தில் மூன்று முறை சுவாமி வலம் வந்ததும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள் காட்சியளித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT