விருதுநகர்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி பலி

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா தடுப்பூசி போட்ட மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவா் தனலட்சுமி (56). இவா் திங்கள்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டாா். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் இருந்த உறவினா்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து தனியாா் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழநதாா். இதுகுறித்து மூதாட்டியின் உறவினா்கள் கூறியதாவது: சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று மாத்திரை உண்டு வரும் நிலையில் கொரோணா பரிசோதனை முகாமில் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் ஒரு தடுப்பு ஊசி செலுத்தி அதன் விளைவாக தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாக உறவினா்கள் கூறினா். மேலும் இதனை கவனத்தில் கொண்டு தடுப்பு முகாமில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உறவினா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT