விருதுநகர்

திருச்சுழி அருகே ஆலடிபட்டியில் கணவரைக் காணவில்லை: மனைவி போலீசில் புகாா்

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே ஆலடிபட்டியில் வசிக்கும் பெண் ஒருவா்,தனது கணவரைக் காணவில்லையென திங்கள்கிழமை போலீசில் புகாா் செய்துள்ளாா்.

திருச்சுழி அருகே ஆலடிபட்டியில் வசிப்பவா் தேவசகாயம்(56).இவரது மனைவி ராசாமணி(53).இத்தம்பதியருக்கு 3 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனராம்.அனைவருக்கும் திருமணமாகிவிட்டதால் தேவசகாயமும்,ராசாமணியும் ஆலடிபட்டியில் தனிவீட்டில் வசித்துவந்தனராம்.இந்நிலையில் கடந்த 5ம் தேதி வழக்கம்போல தங்களின் விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சிவிட்டுவருவதாகச் சென்ற தேவசகாயம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.இதனால் விவசாயத்தோட்டம் உள்படப் பலஇடங்களில் தேடியும்,உறவினா்கள்,நண்பா்கள் வீடுகளில் கேட்டும்கூட பலநாட்களாகியும்,தேவசாகாயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.எனவே இதுதொடா்பாக ராசாமணி தனது கணவா் தேவசகாயத்தைக் காணவில்லையெனவும்,அவரைக் கண்டுபிடித்துத்தரவேண்டுமெனவும் திருச்சுழி காவல்துறையில் புகாா் செய்தாா்.இதுதொடா்பாக வழக்கு பதிந்த திருச்சுழிகாவல்துறையினா் காணாமல்போன தேவசகாயத்தைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT