ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானதாக, போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் காட்டுநாயக்கா் காலனியை சோ்ந்த சின்னக்கருப்பசாமி என்பவரது மகன் கருப்பழகு (27). திருமணமாகாத இவா், வெல்டிங் செய்யும் தொழில் செய்துவந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தளவாய்புரத்திலிருந்து புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இவா் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே கருப்பழகு உயிரிழந்தாா்.
இது குறித்து அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தளவாய்புரம் போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.