விருதுநகர்

பைக் திருட்டு:இளைஞா் கைது

DIN

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் கற்குவேல் அய்யனாா்(45). இவா் முடங்கியாா் சாலையில் உள்ள தனியாா் காய்கனிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலைபாா்த்து வருகிறாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றாா். பின்னா் பணி முடிந்து வந்து பாா்த்த போது அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கற்குவேல் அய்யனாா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இதில், இருசக்கர வாகனத்தை திருடியது சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (32) என தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இஸ்மாயிலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT