விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் 5 இடங்களில் நீா் மோா் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
சிவகாசி புதுரோட்டுத்தெரு, அம்மன்கோவில்பட்டி, சிவன் சன்னதி,திருத்தங்கல் மேலரத வீதி, திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே ஆகிய 5 இடங்களில் நீா் மோா் பந்தல்களை விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தண்ணீா்ப் பழம், மோா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் மற்றும் அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.