விருதுநகர்

ராஜபாளையம் அருகே தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் சாலையில், அட்டை மில் முக்கு ரோடு பகுதியில் தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில் நூற்பாலைகள் அதிகளவில் உள்ளன. கூலித் தொழிலாளிகள் நிறைந்த இப்பகுதியில் மதுபானக்கூடம் திறக்கக் கூடாது என அப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது ஒரு வாரத்திற்குள் மதுபானக்கூடம் மாற்றி அமைக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT