அருப்புக்கோட்டை கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு வேப்பிலை, பால், பன்னீா், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா்.
மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டி, கோயில் சாா்பில் செவ்வரளி,மல்லிகைப் பூக்கள் மற்றும் குங்குமத்தால் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது.