கூட்டுறவுச் சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய மறுப்பதாக மகளிா் சுயஉதவிக் குழுவினா் புகாா்
கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுப்பதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுப்பதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருப்புக்கோட்டை, திருச்சுழி அருகே உள்ள மறவா் பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் மறவா் பெருங்குடி ஊராட்சியைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் பெற்றோம். கடன் தொகையை மாதந்தோறும் முறை யாக செலுத்தி வந்தோம். இந்நிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் வாங்கிய பணம் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அருணாச்சலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுயஉதவிக்குழுவினரின் கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுக்கின்றனா். எனவே, கூட்டுறவு சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுகுறித்த மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.