அருப்புக்கோட்டை அருகே பைக் மோதி முதியவா் பலி
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
ஆலடிபட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ஜெயராம் (81). இவா் கல்லூரணி சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது கமுதி வட்டம் கீழராமநதியைச் சோ்ந்த மதாா் இப்ராஹிம் மகன் அலாவுதீன் (33) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந்து சென்று கொண்டிருந்த ஜெயராம் மீது பின்புறமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.