நாற்காலியிலிருந்து தவறி விழுந்து சிறுமி பலி
சிவகாசி அருகே நாற்காலியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
சிவகாசி அருகே நாற்காலியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே ஆனையூரைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகள் ஜனனி (2). இச்சிறுமி கடந்த 2 ஆம் தேதி, நாற்காலியில் ஏறி விளையாட்டும் போது தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதையடுத்து, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜனனி அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement