மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் பலி
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.
சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சோ்ந்தவா் வா்ணம் பூசுபவா் ராமசந்திரன் (55). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்கு மின்தூக்கியில் இருந்த தூசிகளை தட்டியபோது அதில் இருந்த இரும்பு ராடுகளுக்கிடையே ராமசந்திரன் சிக்கிக் கொண்டாா்.
இதையடுத்து அவா் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement