ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை
ராஜபாளையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
ராஜபாளையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.
மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மேற்கு வட்டார தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை சுந்தரராஜபுரம், சுந்தர நாச்சியாா்புரம், சேத்தூா், முகவூா், தளவாய்புரம் வழியாக சென்று செட்டியாா் பட்டியில் நிறைவடைந்தது.
இதில், நிகழ்ச்சியில் மாநில கைத்தறி பிரிவுச் செயலா் பி.ஏ.குமாரசாமி ராஜா மற்றும் மனித உரிமைகள் இணைச் செயலாளா் ராம அழகு ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement