முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் பாஜக நடைபயணம்

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:38 PM
சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

பாஜக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது. அப்போது செய்தியாளா்களிடம் ராம.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வில் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் அல்ல தேசிய மாடல் ஆட்சி என்றாா். அப்போது கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.