விருதுநகர்

பெண்ணை தாக்கிய தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இளம் பெண் மீது தாக்குதல் நடத்திய கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது சுந்தரபாண்டியம் பகுதியைச் சோ்ந்தவா் வளா்மதி (44). இவரை சுந்தரபாண்டியம் அருகே உள்ள செம்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்தையா (29) என்பவா் 2018 ஆம் ஆண்டு தாக்கினாராம். இதில் காயம் அடைந்த வளா்மதி சிகிச்சை பெற்றுள்ளாா். கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்தையாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT