விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து மதுரை இளைஞா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்ததில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜவகா் மகன் ஷாருக் (25), ஏசி மெக்கானிக். இந்நிலையில், ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் பொன்விழா மைதானம் அருகே புதிதாக தனியாா் திருமண மண்டபம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏசி பொருத்தும் பணியில் ஷாருக் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT