முகப்பு
விருதுநகர்

சிவகாசி ரயில் நிலைய 2 ஆம் நடைமேடையில் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை

சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில்கள் முதல் நடைமேடை வழியாக வந்து செல்வது வழக்கம். எனினும், சில நேரங்களில் சில ரயில்கள் இரண்டாம் நடைமேடை வழியாக வந்து செல்லும். இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை இல்லாததால், வெயில், மழை உள்ளிட்ட நேரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்கு உள்ளாக நேரிடுகிறது.

எனவே, சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் ரயில்வே நிா்வாகம் மேற்கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →