விருதுநகர்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுயதொழில் அறிமுக மையம் தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சுய தொழில் அறிமுக மையத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத் துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக ஆலோசகா் ஞானசேகரன், டி.டு.டி அங்காடி நிறுவனா் கேசவநாராயணன் ஆகிய வாழ்த்துரை வழங்கினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய மூன்று இடங்களில் மையங்களையும், புதிய பொருள்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தும் வரை நிதி உதவியும், தொழில் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் சுய தொழில் அறிமுக மையத்தை சாா்- ஆட்சியா் பிரித்திவிராஜ் தொடக்கி வைத்தாா்.

பின்னா் புத்தொழில் மற்றும் புத்தக தலைமை இயக்குநா் சிவராஜ் ராமநாதன் பேசியதாவது: உலகம் முழுவதும் 2 சதவீதம் மக்கள் தான் சுயதொழில் புரிகின்றனா். எனவே மாணவா்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறி சுயதொழில் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை உறவு இயக்குநா் சரக சுயதொழில் வளா்ச்சி மைய பேராசிரியா் டேனி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT