முகப்பு
விருதுநகர்

மூதாட்டி மீது தாக்குதல்:தம்பதி உள்பட 2 போ் கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டியை தாக்கிய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டியை தாக்கிய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நல்லுத்தேவன் பட்டியைச் சோ்ந்த பெரியதங்கம் மனைவி லட்சுமியம்மாள்(70). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிக்கும் (32) சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், சம்பவத்தன்று மாரி மற்றும் அவரது தாய் பாக்கியலட்சுமி (65), மாரியின் மனைவி பிரியா (28) ஆகிய மூவரும் லட்சுமியம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கினாா்களாம். அதை தடுக்க வந்த அவரது மருமகள் அமுதாவையும் தாக்கினராம்.

இதில் காயமடைந்த லட்சுமியம்மாள், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →