விருதுநகா் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மல்லாங்கிணறில் செப். 2 அன்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா் கே.கே.எஸ். எஸ்.ஆா். ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலா் தங்கம் தென்னரசு ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விருதுநகா் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் செப். 2 அன்று மல்லாங்கிணறில் உள்ள ராஜாமணி திருமண மண்டபத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் மாலை 4.30-க்கு நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில மற்றும் மாவட்ட அணி நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.